தமிழக அரசின் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் முலம் பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நடக்கவுள்ள சாக்ஷார் பாரத் திட்ட பணிகளுக்காக, பி.எஸ்.சி., - எம்.எஸ்.சி., - பி.காம்., - எம்.காம்., மற்றும் கம்ப்யூட்டர் இயக்க, (எக்சல், எம்.எஸ்.வேர்டு, ஆக்சஸ்) தெரிந்த பட்டதாரிகள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.
மாதம் 6,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன், (ஜெராக்ஸ் நகல்) விண்ணப்பத்தை, சென்னை, கல்லூரி சாலை, பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனருக்கு ஏப்ரல் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் 6,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன், (ஜெராக்ஸ் நகல்) விண்ணப்பத்தை, சென்னை, கல்லூரி சாலை, பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனருக்கு ஏப்ரல் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment